Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டாங்குளத்தூர் பள்ளியில்.. சிறுமிக்கு ஆசிரியரே பாலியல் டார்ச்சர்! இது சகஜம்! திமிராக பேசிய பள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காட்டாங்குளத்தூரில் இருக்கும் பிரபல பள்ளி ஒன்றில் சிறுமிகளுக்கு அங்கே வேலை பார்க்கும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ளது வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி. பிரபல ஐடி நிறுவனம் ஒன்றிற்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த பள்ளியில் அந்த ஐடி ஊழியர்களின் குடும்பத்து குழந்தைகள், அருகே உள்ளே குடியிருப்பை சேர்ந்த குழந்தைகள் பலரும் படிக்கிறார்கள்.

A famous school under fire after mis allegations in Kattangulathur Chennai

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த பள்ளியை சேர்ந்த சிறுமி ஒருவர்.. பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பெற்றோரிடம் புகார் கொடுத்துள்ளார். பிஞ்சு மனம் மாறாத அந்த யுகேஜி சிறுமி, தன்னை ஆசிரியர்கள் தவறாக தொடுவதாக புகார் அளித்துள்ளார்.

அதோடு அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் தவறான சில "செயல்களை" அவர்கள் செய்ததும் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அந்த சிறுமியை சோதித்துவிட்டு அவரின் பெற்றோர் இதை பற்றி போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அதன்படி பி.இ.டி ஆசிரியர் ராசையா, மியூசிக் ஆசிரியர் காயேசுகுமார் குமார் ஆகியோர் சேர்ந்து பள்ளியில் வைத்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் பின்னர் தெரிய வந்தது.

இந்த விவகாரம் சிறுமி மூலம் பெற்றோருக்கு தெரியவர.. அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி ஆசிரியர்கள் மேலும் சிலர் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளது.

அதோடு வித்யா மந்தீர் எஸ்டான்சியா பள்ளி மாணவிகள் இன்னும் பலர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதை பற்றி விசாரிக்க சென்ற போலீசாரிடம் பள்ளியின் முதல்வர் சங்கரி திமிராக நடந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தட்டிக்கேட்ட பெற்றோர்களிடமும் முதல்வர் சங்கரி.. இதெல்லாம் சகஜம்தான். இயல்பா நடக்கற விஷயம்தான். குழந்தைங்க மேலேதான் தப்பு. எல்லாம் தப்பா வளர்ந்து இருக்காங்க.

இங்கே 3ம் வகுப்பு குழந்தைகள் கூட சுய இன்பம் செய்யுறாங்க.. குழந்தைங்க முதலில் சரியா இல்லை . அவங்களை முதல்ல கண்டிக்கணும். இதெல்லாம் வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னாடியே "பாலியல் உறவு" செய்வதால் நடக்கும் பிரச்சனை. அங்க தப்பா கத்துக்கிட்டு வந்து இப்போ எங்க மேலே பழியை போடுறாங்க. மற்றபடி ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்ட புகார்கள் எல்லாம் சகஜம் என்று அப்படியே புகார்களை பிஞ்சு குழந்தைகள் மீது திருப்பிவிட்டுள்ளார் பள்ளி முதல்வர் சங்கரி.

அதோடு விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக போலீசார் தற்போது பி.இ.டி ஆசிரியர் ராசையா, மியூசிக் ஆசிரியர் காயேசுகுமார் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். பள்ளி முதல்வர் சங்கரி இவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் அவரை நீக்க வேண்டும்.. அவரையும் கைது செய்ய வேண்டும்.. அவருக்கும் இதில் உடந்தை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+