மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்.. தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை.. அறிகுறி என்ன? சிகிச்சை எப்படி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்ட 32 வயதான சென்னை இளைஞர் ஒருவருக்குப் பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாட்டின் அனைத்து மாநிலங்களைப் பேலவே தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.
அதன் பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு ஐந்தாயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா புதிய வைரஸ் என்பதால் இது குறித்துப் பல தகவல்கள் இன்னும் நமக்குத் தெரியவில்லை. வேக்சின் கண்டுபிடித்தாலும்கூட கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நீண்ட கால பாதிப்பு எப்படி ஏற்படும் என்பது குறித்து எல்லாம் ஆராய்ச்சிகள் தொடர்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் எனப் பல பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது.

பச்சை பூஞ்சை
அதேபோல நாட்டில் சிலருக்கு வெள்ளை பூஞ்சை மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்புகளும்கூட ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது ஒருவருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 32 வயது நபருக்குப் பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

இது தான் அறிகுறி
அந்த நபர் சமீபத்தில் தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும் அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர், அவருக்கு உடல் சோர்வு, உடல் வலி, மஞ்சள் நிறத்தில் சளி, மூக்கிலிருந்து ரத்தம் வெளியேற்றம், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏன் ஏற்படுகிறது
அவருக்கு நடத்தப்பட்ட எண்டோஸ்கோப்பி சோதனையில் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட டிஸ்யூக்கள் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோன வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஆன்டிபாடி மாத்திரைகள் வழங்கப்படும். இதனால் உடல் மிகப் பலவீனமாக இருக்கும். அப்போது பூஞ்சை பாதிப்பு எளிதாக ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கே பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications