அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புதிய கட்சித் தொடக்கம் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ஊடக நேர்காணல் ஒன்றில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாமலையின் டெல்லி பயணம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் தமிழகத்தின் சாதி அரசியல் குறித்து அய்யநாதன் தெரிவித்த கருத்துக்கள், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

பத்திரிகையாளர் அய்யநாதன் பேசும்போது, "தன்னுடைய பதவி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அண்ணாமலை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு இயக்கம் இது. பாஜகவில் இருந்து அந்த உயர்நிலையை எட்டலாம் என்று அவருடைய திட்டம் தோல்வியுற்றது.

Annamalai BJP Tamil Nadu BJP Strategy Delhi Political Plan Political Master Plan Tamil Nadu Politics

அவரை ஒரு தலைவராக்கி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கலாம், கட்சியைப் பலப்படுத்தலாம் என்று பாஜக மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அதனால்தான் "என் மண் என் மக்கள்" என்று சொல்லக்கூடிய அந்தப் பரப்புரைக்காக பாஜக கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் வரை செலவு செய்தது. ஆனால், அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

பாஜகவின் நேரடி A டீம்

விஜய் அரசியலுக்கு வரும்பொழுது அவர் பாஜகவின் B டீம் என்று சொல்லப்பட்டது, அவருடைய செயல்பாடுகளும் அவ்வாறே இருந்தன. இப்போதும் அண்ணாமலையை அப்படித்தான் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர் பாஜகவின் 'A' டீம், 'B டீம் எல்லாம் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜகவின் நேரடித் தரப்பு அண்ணாமலைதான்.

இவருடைய புதிய கட்சியில் பாஜகவின் எந்தவொரு கொள்கையும் இருக்காது. மாறாக, தற்போது சீமான் தோல்வியடைந்து வரும் நிலையில், அண்ணாமலை தமிழ் தேசியக் கொள்கையைக் கையில் எடுப்பார். தமிழ்நாடு, தமிழர் நலன், தமிழருடைய வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட தமிழர் பிரச்சனைகள் அனைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, மாநில சுயாட்சி குறித்தும் பேசுவார்.


பாஜகவின் மதச்சார்புக் கொள்கை

பாஜகவின் மதச்சார்புக் கொள்கையை அண்ணாமலை வெளியில் கடைப்பிடிக்க மாட்டார். "மதச்சார்பின்மைதான் நமது நாட்டின் கொள்கை" என்றுதான் பேசுவார். பாஜகவும் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாது.

தங்களுக்கு ஆதரவான தங்களுடைய ஆள், எந்த வடிவத்தில் வந்தாலும் தங்களுக்கு சாதகமாக இருந்தால் போதும் என்பதே அவர்களின் எண்ணம். "பழைய சித்தாந்தங்களுக்கு இடமில்லை" என்று அண்ணாமலை கூறுவது பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைத்தான். புதிய சித்தாந்தம் என்று அவர் குறிப்பிடுவது மோடி சித்தாந்தத்தைத்தான், அதனைச் சற்றே மாற்றி அண்ணாமலை சித்தாந்தமாக முன்னெடுப்பார்கள்.

பொதுத் தேர்தல் மட்டும்தான் என்னுடைய குறி, இடையில் இருக்கும் தேர்தல்களில் கவனம் செலுத்த மாட்டேன் என்று அண்ணாமலை சொல்வது, 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பேசிய அதே உத்திதான்.

பொதுத்தேர்தலுக்கு அண்ணாமலை குறி

உள்ளாட்சித் தேர்தல்களை பொறுத்தவரை, மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு, ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மக்கள் நேரடியாகச் சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். அங்கு இவர்களால் வேலை செய்ய முடியாது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப் போனால் இவர்களின் பலவீனம் வெளியில் தெரிந்துவிடும். பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் 9,000-க்கும் மேற்பட்ட இடங்களில் பிஜேபி டெபாசிட் இழந்தது போன்ற நிலை இங்கும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் மிகவும் உஷாராக உள்ளாட்சித் தேர்தல்களைத் தவிர்த்துவிட்டு, பொதுத் தேர்தலை மட்டும் இலக்கு வைக்கிறார்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல்களில் மட்டும்தான் இவர்களுடைய கருவிகள் வேலை செய்யும். எந்தத் தேர்தலில் அந்த இயந்திரங்கள் வருகிறதோ, அந்தத் தேர்தலில் மட்டும் வந்து அமர்ந்து கொள்ளலாம் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இளைய தலைமுறையினர் ஒரு நடிகரின் நடனத்தைப் பார்த்துவிட்டு ஓட்டுப் போடுவார்களா? தன் மனைவியைப் புறக்கணிக்கிற ஒருவரை இந்தத் தலைமுறை ஆதரிக்குமா? தமிழ்நாட்டின் உண்மையான இளைய தலைமுறையின் அடையாளம் ஜல்லிக்கட்டுப் போராட்டம்தான். எந்தவொரு அரசியல் கட்சியையும் அனுமதிக்காமல் "தமிழன்டா" என்று ஒன்று சேர்ந்தவர்கள்தான் அவர்கள். அன்றைய போராட்டத்தில் விஜய் பங்குபெற்றும் கூட, அவரால் அவர்களை ஒரு புதிய அரசியல் சக்தியாக ஒருங்கிணைக்க முடியாமல் போனது.

அண்ணாமலையும், விஜய்யும்

திரைப்படங்களுக்கு விசில் அடிக்கும் ஒரு குறிப்பிட்ட மேல்-மத்திய வர்க்கத்தினர் தேர்தலின் போது வாக்களிக்க வரமாட்டார்கள். இயற்கை பேரிடர் வந்தால் கூட அவர்கள் அலுவலகத்திற்கோ அல்லது கடற்கரைக்கோ போவார்களே தவிர அரசியலுக்கு வரமாட்டார்கள்.

இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத வாக்குகளை வைத்துக் கொண்டு, "இளைய தலைமுறையின் எழுச்சி" என்று தங்களுக்குச் சாதகமாகச் சிலர் பேசிக் கொள்கிறார்கள். நேபாளத்தில் இளைய தலைமுறையினர் அறிவார்ந்த அரசியலை முன்னெடுத்தார்கள், அதுதான் உண்மை. இங்கு பேசுவது எல்லாம் வெறும் பொழுதுபோக்குதானேயொழிய உண்மையான அரசியல் விழிப்புணர்வு அல்ல.

தமிழக அரசியல் களத்தில் திராவிடக் கட்சிகளை ஒழிப்பதற்காக டெல்லியால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ள புதிய சக்திகளே அண்ணாமலையும் விஜய்யும்" என்று பத்திரிகையாளர் அய்யநாதன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+