Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்நியூஸ்.. அடுத்த 100 ஆண்டுக்கு கவலை வேண்டாம்! காசநோய்க்கு வரும் புதிய தடுப்பூசி! 3ம் கட்ட சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் எப்போதும் காசநோய் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், கூட ஆண்டுக்கு 16 லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்த நோய்க்கு பலியாகின்றனர். இந்நிலையில், இந்நோய்க்கு எதிராக தற்போது புதிய தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த தடுப்பூசி சுமார் 85 லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்த அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.2 லட்சம் மக்கள் இந்த காசநோயால் உயிரிழக்கின்றனர். தற்போது இந்த நோய்க்கு எதிராக BCG எனப்படும் காசநோய் தடுப்பூசிதான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது, இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மட்டுமே பலனளிக்கும். மற்றபடி பெரியவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்காது. மட்டுமல்லாது இந்த தடுப்பூசி சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகும்.

A new vaccine is being prepared against tuberculosis! Intensity in phase III testing

எனவே உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு மாற்றாக வேறு ஒரு தடுப்பூசியை தயாரிக்க ஆய்வாளர்கள் தொடர்ந்து முயன்று வந்தனர். தற்போது இந்த முயற்சி ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு தயாரித்த தடுப்பூசியை பரிசோதித்து பார்க்க உலகின் மிகப்பெரிய பணக்கார தொண்டு நிறுவனங்களான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் வெல்கம் ஆகியவை நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த பரிசோதனைக்காக மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சினிமாக்களில் வருவதை போல ஏதோ இரண்டொரு எலிகளுக்கு இந்த மருந்து கொடுத்து டெஸ்ட் செய்வதை போல் அல்ல இந்த செயல்பாடு. இப்போது தொடங்கினால் கூட இந்த மருந்தை பரிசோதனை செய்து முடிக்க 6 ஆண்டுகள் வரை ஆகும். அந்த அளவுக்கு இதற்காக உழைக்க வேண்டியுள்ளது. எனவேதான் இவ்வளவு பணம் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 73 சதவிகிதம் நிதியை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும், மீதமுள்ள 27 சதவிகித நிதியை வெல்கம் அறக்கட்டளையும் வழங்குகிறது.

காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. எனவே இதற்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துக்கு M72/AS01E என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மற்ற நாடுகளை விட ஆப்பிரிக்கா நாடுகள்தான் அதிக அளவில் காசநோய் மரணத்தை சந்திக்கின்றன. இச்சூழலில் இந்த தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால் காசநோய் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் என்று அந்நாட்டின் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் பொது ஈடுபாட்டின் தலைவர் நோமதம்சங்கா மஜோசி கூறியுள்ளார்.

இந்த நோயானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மறைநிலையில் பாதிப்பு இருத்தல் (Latent TB). அதாவது இவருக்கு பாதிப்பு இருக்கும் ஆனாலும் வெளியில் தெரியாது. இவரால் தொற்று பரவாது. இரண்டாவது வகை நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருப்பது தெளிவாக தெரியும். இவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒரு ஆண்டில் சுமார் 10-12 பேருக்கு இந்த நோயை பரப்பிவிடுவார்கள்.

இந்த முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு நோய் பரிணாமம் அடைவதைத்தான் இந்த M72 தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது. தற்போது இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அடுத்த ஆண்டு தொடக்கப்பட இருக்கிறது. எப்படியாயினும் இந்த பரிசோதனைகள் முடிவடைய 6 ஆண்டுகள் வரை ஆகலாம். பரிசோதனை முடிவுகள் அவ்வப்போது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வெளியிடும்.

எதிர்பார்த்தபடி இந்த பரிசோதனை வெற்றியடைந்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த தடுப்பூசி, காசநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 85 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றும். அதேபோல 7.6 கோடி பேரை காசநோயிலிருந்து இது காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+