ஊரடங்கால் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மூதாட்டி.. குடும்பத்தினருடன் சேர்க்க கோரிக்கை!
சென்னை: ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மூதாட்டி ஒருவர் தன்னை குடும்பத்தினருடன் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க கடந்த 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த 21 நாட்களில் கொரோனா கட்டுப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஊரடங்கின் போதே பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியில் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வரும் மீனாட்சி என்ற மூதாட்டி ஒருவர், ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்து வருகின்றார்.
சிதம்பரத்தை அடுத்த வல்லமடை கிராமத்தை சேர்ந்த அவர், அங்குள்ளவர்களின் உதவியோடு உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். எப்படியாவது தன்னை தனது சொந்த ஊரில் உள்ள பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மூதாட்டிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த 97876 55816 மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு அவருக்கு முன் வரலாம்.












Click it and Unblock the Notifications