திடீரென தீப்பிடித்த பஸ்.. கிளம்பிய கரும்புகை.. முடங்கிய சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏசி வசதி உள்ளது. இந்த பஸ்சை நீலகண்டன் என்பவர் பேருந்து ஓட்டினார். ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் சிலை அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று பேருந்தில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலகண்டன் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் பேருந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் இருங்காடு கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் பஸ் முற்றிலுமாக எரிந்தது. பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. பேருந்தில் இருந்து புகை வந்ததை உணர்ந்து ஓட்டுனர் நீலகண்டன் உடனடியாக வெளியேறியதால் அவரும் தப்பித்தார். பேருந்தின் முன்பகுதியில் பிடித்த தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் பஸ் முழுவதும் தீக்கிரையானது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்து காரணமாக சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் கரும்புகை வெளியானது. மேலும் பாதுகாப்பு கருதி தீப்பற்றி எரிந்த பேருந்து அருகே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications