டேக் ஆப் செய்யும் "அந்த" நொடி.. திடீரென சுதாரித்த விமானிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் கத்தாருக்கு பல்வேறு விமானங்கள் செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் டோஹா நோக்கி அந்த விமானம் சென்றது
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் பஸ் வகை விமானம் ஆகும் இது.

டேக் ஆப்
விமானம் 8 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. அதன்படியே டேக் ஆப் செய்ய கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டது. விமானத்தில் மொத்தம் 139 பயணிகள் இருந்தனர். விமானிகள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர். மொத்தமாக விமானத்தில் 146 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விமானம்
இந்த நிலையில் விமானம் டேக் ஆப் செய்யும் நொடியில் அதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டேக் ஆப் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதை கடைசி நொடியில் விமானிகள் கவனித்து உள்ளனர். விமானத்தை டேக் ஆப் செய்ய விமானிகள் முயன்று உள்ளனர்.

இயந்திர கோளாறு
விமானத்தின் எஞ்சின்களில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன கோளாறு என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விமானத்தை தொடர்ந்து டேக் ஆப் செய்து இருந்தால் அது பெரிய பிரச்சனையாக முடிந்து இருக்கும். விமானம் பெரிய விபத்தில் கூட சிக்கி இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுப்பாட்டு அறை
உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் விமானத்தை டேக் ஆப் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். விமானத்தில் இயந்திர கோளாறு இருக்கிறது. அதனால் டேக் ஆப் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். விமானி உரிய நேரத்தில் வேகமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு, 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் உயிர் தப்பினர். இந்த கோளாறுக்கான் காரணம் தெரியவில்லை. விமான நிலைய அதிகாரிகள் இது பற்றி விசாரணை செய்து வருகின்றன. பயணம் தடைபட்ட பயணிகளுக்கு வேறு விமானம் 24 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications