Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜி வழக்கின் தீர்ப்பு என்ன?.. படித்துக் காட்டிய ஆ.ராசா.. அதிமுகவுடன் மறுபடியும் நேரடி மோதல்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2ஜி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான விவாதம் கடந்த சில தினங்களாக ஆ ராசாவுக்கும், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.

2ஜி தொடர்பாக ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் 2ஜி குறித்து விளக்கம் அளிக்க திமுக எம்பி ஆ ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்

அப்போது அவர் தனது குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன் மீது தொடரப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் என வாசித்து காட்டினார். அவர் கூறுகையில் மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை

விடுதலை

எந்த தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். 2 ஜி வழக்கில் கடைசி வரை யாருமே சாட்சியுடன் வரவில்லை என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை எழுதி முடித்த நீதிபதி தனது ஆற்றாமையை சுமார் 5 பக்கங்களுக்கு எழுதியுள்ளார்.

ஷெல் கம்பெனி

ஷெல் கம்பெனி

இப்படி ஒரு ஊழலா? பல்வேறு ஷெல் கம்பெனிகளை உருவாக்கி, ஒன்றிலிருந்து பணத்தை மற்றொன்றுக்கு பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மறந்து அவர்கள் அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஊழலில் ஈடுபட்டிருப்பது பதவியேற்பின் போது அளித்த உறுதிமொழியை மீறுவதாகும்.

புனிதத்தன்மை

புனிதத்தன்மை

இது அரசியலமைப்பின் புனிதத்தன்மையை களங்கப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட செயலானது நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, நமது மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலையாகும் என ராசா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+