“பெரியார், அம்பேத்கர் முகம் பொறித்த தாலி.. விருந்தில் பீப் 65".. சுயமரியாதை திருமணம் செய்த தம்பதி
சென்னை: சென்னை பெரியார் திடலில் டாக்டர் தெய்வேந்திரன் என்பவரும் ஜெனிபர் என்ற நிஷா ஆகியோர் நேற்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பெரியார், அம்பேத்கர் முகம் பொறித்த மோதிரம் அணிந்து அவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை பெரியார் திடலில் டாக்டர் தெய்வேந்திரன் என்பவரும் ஜெனிபர் என்ற நிஷா ஆகியோர் நேற்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி டாக்டர் தெய்வேந்திரன் அளித்த பேட்டியில், "என் பெயர் தெய்வேந்திரன்.. எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை.. என் மனைவிக்கு சொந்த ஊர் ஊட்டி.. எங்க திருமண இணையேற்பு விழா, தோழர் அய்யா நல்லக்கண்ணு தலைமையிலும், திராவிட விடுதலைக்கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி மற்றும் புரட்சி இயக்குனர் அறம் பட இயக்குனரான கோபி நயினார் தோழர் முன்னிலையில் எங்கள் திருமணம் முடிந்தது.

எங்கள் திருமணத்தின் சிறப்பு என்னவென்றால்,, புரட்சியாளர் அம்பேத்கருடைய பிறந்த நாளில், அய்யா பெரியாருடைய திடலில், தோழர் நல்லக்கண்ணு அய்யாவை வைத்து இந்த திருமணத்தை நடத்தி உள்ளோம்.. இது எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம்.. இந்த திருமணத்தோட தனிச்சிறப்புகள் என்னவென்றால், நாங்கள் இரண்டு பேரும் வேறு வேறு சாதி மற்றும் வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்.. நாங்கள் சாதி மத மறுப்பு திருமணத்தைத்தான் நாங்கள் முன்னெடுத்து செய்திருக்கிறோம்.
நான் ஒரு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக இருந்து கொண்டிருக்கிறேன்.. அடிமட்டத்தில் இருந்து படித்து மேலே வந்தவன் என்பதால், இதை விட்டுவிடக்கூடாது.. நம்ம திருமணத்திலும் ஒரு குறியீடாக வைத்தால் தான் முன்னெடுப்பாக இருக்கும் என்பதால் திருமணத்தை பண்ணியிருக்கோம்..

இந்த திருமணத்தோடு தனிச்சிறப்புகள் பார்த்தீர்கள் என்றால், பெரியார் திடலில் நடத்தியது, அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்தியது, அய்யா நல்லக்கண்ணு மற்றும் தோழர்கள் எல்லாம் கலந்து கொண்டது.. எங்கள் திருமணத்தின் மதிய விருந்தில் பீக் 65 (மாட்டுக்கறி) சேர்த்துள்ளோம். அசைவம் தான் மதிய உணவாக தந்தோம்... இதை தமிழ்நாட்டில் சிலர் வெறுக்கும் சூழலில் இதை பதிவு செய்ய வேண்டும் என்று பீப் உணவையும் நாங்கள் சேர்த்துள்ளோம்.
அதுமட்டுமின்றி பறை இசையை துக்க நிகழ்விலும், ஒதுக்கி வைப்பதுமாக பார்க்குற நம்முடைய சமூகத்தில் பறை இசை குழுவினரை வரவழைத்தோம்... எங்கள் திருமணத்தில்அவர்களை இசையை நாங்கள் பதிவு செய்தோம்.. இதுதான் சரியான இசை என்று நாங்கள் பதிவு செய்தோம்.. நாங்கள் திருமணத்தில் அணிவித்துக் கொண்ட மோதிரத்தில் எனக்கு அவர்கள் அம்பேத்கர் முகம் பொறித்த மோதிரத்தை அணிவிப்பது போலவும், அவருக்கு நான் பெரியார் மோதிரத்தை அணிவிப்பது போலவும் இருக்கும்.. எங்கள் தாலியில் அம்பேத்கர் பெரியார் புகைப்படம் இருக்கு.." இவ்வாறு கூறினார்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications