சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி.. துப்பாக்கி முனையில் கைது! பரபரத்த விருகம்பாக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அனோவர் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அன்வர் , அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. சென்னையில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டபடி, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

Chennai terrorist

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹபிபுல்லா அளித்த தகவலின் பேரில் அன்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதி ஹபிபுல்லா மீது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கன்க்சா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில போலீசார், சென்னை வந்து கோயம்பேடு போலீசார் உதவியுடன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓரு ஓட்டலில் இருந்து அன்வரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

வங்கதேசத்தில் மத அடிப்படைவாத இயக்கங்களின் ஆதரவாளராகவும், பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் அன்வர் இருந்து வந்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு பிரிவில் அன்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் தங்கி இருந்த இடத்திலும் போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+