ஜம்ப் சூட் உடை அணிந்து நிலைக்குலைந்து கிடந்த யாஷிகா தோழி வள்ளிச் செட்டி பவணி.. வைரல் ஸ்பாட் வீடியோ
சென்னை: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ஸ்பாட்டில் எடுத்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன. அதில் யாஷிகாவின் தோழி வள்ளிச் செட்டி பவணி நிலைக்குலைந்து சரிந்து கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
நடிகை யாஷிகா ஆனந்த் மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு தனது நண்பர்களுடன் காரில் கடந்த 24 ஆம் தேதி இரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை.

டிரைவிங் லைசன்ஸ்
இதை அறிய அப்பகுதிகளில் சிசிடிவிகளும் இல்லை. இதனால் போலீஸார் அப்பகுதிவாசிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் யாஷிகா குணமடைந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே அவரது டிரைவிங் லைசன்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடியோக்கள்
இந்த நிலையில் கைகளை எடுத்துவிட்டு யாஷிகா கார் ஓட்டிய வீடியோ இறப்பதற்கு முன்பு அவரது தோழி பவணியால் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. இது போல் விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் சில வீடியோக்களை எடுத்துள்ளார்கள்.

மீட்பு பணிகள்
அவை ஒவ்வொன்றாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில் யாஷிகா தோழி பவணி குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார் விபத்துக்குள்ளாகி ஒரு பக்கமாக சாய்ந்து கிடக்கிறது. அதை சுற்றி பொதுமக்கள் நின்று கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

பொதுமக்கள்
அதில் ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லியாச்சா என்றெல்லாம் பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். மேலும் அந்த காரில் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் பர்ஸ், பைகளை எடுத்து செல்கிறார்கள். அதற்கு பொதுமக்கள் " பேக்லாம் எதுக்கு எடுக்கறீங்க? நீங்கலாம் யாரு? ஏதாவது பொருள் காணாமல் போச்சுன்னா உள்ளூர்வாசிகள் எங்களைத்தான் போலீஸார் கேட்பார்கள் என்கிறார்கள்.

பவணி
இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க சிறிது தூரத்தில் பவணி நிலைக்குலைந்து விழுந்து கிடக்கும் காட்சி பதற வைக்கிறது. அந்த சமயத்தில் பவணி உயிரோடு இருந்தாரா இல்லையா என தெரியவில்லை. பொதுமக்கள் வாக்குவாதத்தை பார்க்கும் போது பவணியை விட்டுவிட்டு அந்த காரில் வந்தவர்கள் தப்பினால் போதும் என்ற அளவுக்கு நடந்து கொண்டது தெரிகிறது.
Recommended Video

உடை
கருப்பு, வெள்ளை நிறத்தில் சிங்கிள் பீஸில் ஜம்ப் சூட் உடையை அணிந்துள்ளார். இந்த காட்சிகளைப் பார்க்கும் போதே நெஞ்சம் பதைக்கிறது. அதை விட அந்த கார் உருக்குலைந்து காணப்பட்டதை பார்க்கும் போது இவர்கள் எத்தனை வேகத்தில் காரை ஓட்டியிருப்பார்கள் என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.












Click it and Unblock the Notifications