சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'போடி தொகுதியில்..ஓ.பி.எஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கணும்'.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: போடிநாயக்கனுர் தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார்.

A voter has filed a case in the Chennai HC seeking a declaration of invalidity of ADMK OPS victory in the Bodinayakkanur constituency

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தி.மு.க சார்பில் தங்கதமிழ்செல்வன் களம் கண்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ்புதையல் ஆசை.. ஜோதிடர் பேச்சை நம்பி.. வீட்டுக்குள் 20 அடி குழி தோண்டிய கும்பல்.. 3 பேரை அள்ளிய போலீஸ்

Recommended Video

    DMK-ன் நடவடிக்கைகள் அரசியலில் அபாயகரமான சூழ்நிலை உருவாக்கலாம்.. OPS எச்சரிக்கை

    போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் மிலானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    A voter has filed a case in the Chennai High Court seeking a declaration of invalidity of O. Panneerselvam's victory in the Bodinayakkanur constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X