அசிங்கம்.. அவதூறு.. சிக்க போகும் "பயில்வான் ரங்கநாதன்".. சென்னை கமிஷ்னருக்கு பறந்த பரபர புகார்!
சென்னை: சினிமா நடிகை, நடிகர்கள் பற்றி அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பயில்வான் ரங்கநாதன், பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா செய்திகளை வெளியிடுவதற்காக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
சினிமாவில் நடக்கும் பல்வேறு கிசு கிசு தகவல்களை இவர் வெளியிடுவது வழக்கம். பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் பற்றி அதிர்ச்சி அளிக்கும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்கள்
பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி இவர் பல்வேறு செய்திகளை வெளியிட்டு கடுமையான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். உதாரணமாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தின் போது அதை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். இசையமைப்பாளர் ரகுமான் குடும்பம் பற்றியும் இவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதேபோல் சிம்பு பற்றியும் பல்வேறு வீடியோக்களை இவர் வெளியிட்டுள்ளது வழக்கம்.

கமல்ஹாசன்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இவர்களுடன் அவர்களுக்கு தொடர்பு, அவர்களை இவர்களை விரும்புகிறார்கள் என்று ஆதாரம் இல்லாத பல்வேறு தகவல்களை இவர் வெளியிடுவதாக இணையத்தில் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவரின் சில கருத்துக்கள் அத்துமீறி இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பெண் நடிகைகள்
குறிப்பாக பெண் நடிகைகள் குறித்து இவர் நிறைய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரங்களுடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன?
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திவ்யா, தொடர்ந்து பெண்கள் மீது ஆன்லைனில் இவர் தவறாக பேசி வருகிறார். நிறைய முறை இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இப்போதுதான் முறையாக புகார் பதிவு செய்து இருக்கிறோம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் அவதூறாகவும், அசிங்கமாகவும் பெண்கள் பற்றி பேசுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications