Aadhav Arjuna: விஜய்யுடன் வந்த ஆதவ் அர்ஜுனா பையில் மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதா? தவெக நிர்வாகி விளக்கம்
சென்னை: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டார். அவருடைய பையில் கத்திரிக்கோல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் (Aadhav Arjuna) பையில் மது பாட்டில் இருந்தததாகவும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதற்காக இன்று விஜய் தனி விமானம் மூலம் புறப்பட்ட போது விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பைகளில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தமிழக வெற்றிக் கழகம் என்ற புது கட்சியை தொடங்கியுள்ள விஜய் பல்வேறு மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். அதன்படி கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது நெரிசல் ஏற்பட்டதில் குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆணைப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது. குறிப்பாக விஜய்யை டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட விஜய்
இந்த நிலையில் தான் மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 10 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய் நேர்காணல் இருப்பதாக கூறி விலக்கு கேட்டார். இதையடுத்து நாளை நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல விஜய் திட்டமிட்டார்.
வழக்கமாக விஜய் தன் கையில் ஒரு கருப்பு நிற பேக் கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று மதியம் 3 மணியளவில் அதே பேக்குடன் சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது அவரது பையில் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தின் உள்ளே சென்றிருந்த விஜய்யை மீண்டும் கீழே இறங்குமாறு வெளியே அழைத்து வந்தனனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆதவ் அர்ஜுனா பையில் மதுபாட்டில்?
விஜய் விமானத்திற்கு உள்ளே சென்ற நிலையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் அவரை விமானத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து சோதனை நடத்தினர். அவரது சொந்த உடைமை என்பதால் விஜய் முன்பு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதான் என்பதை சோதனை செய்வதற்காக மீண்டும் மறு ஆய்வு செய்ய விஜய்யை அழைத்து சென்றனர். சுமார் 30 நிமிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து விஜய்யுடன் வந்த ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஷ், நிர்மல் குமார், விஜய்யின் தனி பாதுகாவலர் நயீம் உள்ளிட்டோரது உடைமைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா வைத்திருந்த பையில், உயர் ரக மதுபாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. சமூக வலைத்தளங்களில் அதிகம் இது குறித்த தகவல் பரவியது. எனினும், இதனை தவெக தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நிர்மல் குமார் விளக்கம்
இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், குறிப்பிட்ட அந்த செய்தியை மேற்கோள் காட்டி, ஆதவ் அர்ஜுனா பையில் மதுபாட்டில் இருந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா














Click it and Unblock the Notifications