கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ்
கள்ளக்குறிச்சி: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் சர்ப்ரைஸ் ஆய்வுகளை செய்து வருகிறார்கள். சர்ச்சைகள் ஆங்காங்கே இருந்தாலும் தவெக பல நல்ல மாற்றங்களையும் அரங்கேற்றி வருகிறார்கள். போதையில்லா தமிழகம் என்கிற இலக்குடன் தவெக பயணிக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கள்ளக்குறிச்சியில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தின் வட மாவட்டங்களில் மது பழக்கம் அதிகமாக உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதை பழக்கம் அதிகமாக உள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அதிகமாக உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயத்தால் 75க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

அப்போதே சென்னை உயர் நீதிமன்றம் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கல்வராயன்மலையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மிகவும் வறுமையில் உள்ள கள்ளக்குறிச்சியில் 3 மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளன. கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். உயர்கல்வியில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் குறைவாக உள்ளது. இங்கு பலரும் உயர்கல்வி படிப்பதே இல்லை. கல்வராயன் மலையில் மருத்துவமனை கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கல்வராயன் மலையில் இளம் வயது திருமணங்கள் அதிக நடைபெறுகின்றன. கல்வராயன் மலையில் விளையாட்டு மையம் தொடங்கப்படும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதே முதலமைச்சரின் இலக்கு.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் முதலமைச்சர் தனிப்படை அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப்படை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த தனிப்படை கள்ளக்குறிச்சி போன்ற கள்ளச்சாராயம் அதிகம் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுப்பார்கள். தவெக சார்பில் தேர்தலில் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும். எங்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்!












Click it and Unblock the Notifications