Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பன்றியுடன் சண்டையிடாதே!" ஆர்த்தி ரவி போட்ட கிரிப்டிக் போஸ்ட்! யாரை சொல்கிறார் கெனிஷாவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்றியுடன் சண்டையிடாதே என யார் பெயரையும் குறிப்பிடாமல் ஆர்த்தி ரவி இன்ஸ்டா ஸ்டோரி வைத்திருந்தார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என சமூகவலைதளத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

Aarthi Ravi

இதுகுறித்து ஆர்த்தி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருப்பதாவது: "ஒரு தெரபிஸ்ட் சொன்னது: பன்றியுடன் சண்டையிடாதே... நீயும், பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள். ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான்" என்று ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் ஆர்த்தி, ரவிமோகனையும் கெனிஷாவையும் மறைமுகமாக விமர்சித்திருப்பதாகவே பலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆர்த்தி ரவியும், ரவி மோகனும் ஒருவரையொருவர் விமர்சிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆர்த்தி, யார் பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.

கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் உண்மைக்கு புறம்பாக செய்திகள் வந்தன. ஆனால் இதை கெனிஷா மறுத்து, அதெல்லாம் பொய் என கூறியிருந்தார்.

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து நடிகர் ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் இருதரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன் ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+