ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு.. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை முகப்பேர் கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது தொடர்பாக சோதனை நடப்பதாக தெரிகிறது.
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக, சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பாஸ்கர், மோகன் குமார், செந்தில் குமார், மைக்கேல் ராஜ், ஹரி, கூடுதல் இயக்குநர்களான மாலதி, செந்தாமரை, நாகராஜ், பேச்சிமுத்துராஜா, உதயகுமார், அசோக்குமார் ராஜா உள்ளிட்டோரும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜசேகர் என்பவரையும் துபாயில் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ.60 கோடியும், தங்க நகை 3,716 கிராம், வெள்ளி பொருட்கள் 5,007 கிராம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் வங்கியில் இருந்த ரூ.102 கோடி முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், முகப்பேர் கிழக்கு, பூந்தமல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications