என்னங்க இந்த பகுதிகளில் எல்லாம் பால் வரலையா? லேட் ஆகுமாம்! ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் சில இடங்களில் சில மணி நேரம் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஏற்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை முழுவதும் மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாகும்.

ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துவதாகவும், இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் அண்மைக்காலமாக தாமதமாகி வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆவின் பாலில் புழுக்கள் இருப்பதாகவும் புகார்கள் அவ்வப்போது எழுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications