திமுகவுக்கு ஷாக் தந்த ஏசிஎஸ்.. சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளிய மாஸ்டர் பிளான்!
வேலூர் தொகுதியில் சமுதாய வாக்குகளை ஏசி சண்முகம் அள்ளிவிட்டார்
Recommended Video
சென்னை: பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தி பிரச்சாரம் செய்த ஏசி சண்முகத்தை அவர் சமுதாய மக்கள் காப்பாற்றி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
போன முறை அதாவது 2014-ல் ஏசி சண்முகம், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் 2-வது இடத்தைதான் பிடித்தார். இதற்கு காரணம் பாஜகவில் சார்பாக நின்றதால் இஸ்லாமிய ஓட்டுக்கள் இவருக்கு விழவில்லை.
போன முறையே அப்படி என்றால், இந்த முறை அவ்வளவுதான் என்று நினைத்த ஏசி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் நிற்க தயாரானார். எப்படியும் இந்த முறையும் அதிருப்தி ஓட்டுக்கள் விழுந்துவிடக்கூடும் என்பதால், இஸ்லாமிய வாக்குகளை தவிர்த்து மற்ற ஓட்டுக்களை எப்படி வாங்குவது என்று கணக்கு போட்டார்.
திமுகவை கிடுகிடுவென முந்தி தள்ளிய முஸ்லீம்கள்.. 3 தொகுதிகளில் கை தூக்கிவிட்ட அபாரம்!
தீவிர வேலை
வன்னியர்கள் ஒருபக்கம், முதலியார்கள் ஒருபக்கம் இருந்தாலும் இஸ்லாமிய ஓட்டுக்களே வெற்றி தோல்வியை வேலூரில் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த யதார்த்தம் அறிந்தும், தன்னை மட்டுமே முழுதாக நம்பி களம் இறங்கினார் ஏசிஎஸ்.
தலித் ஓட்டுக்கள்
தன்னுடைய முதலியார் வாக்கு உட்பட, நாயுடு, தலித், பிற சமூக வாக்குகள் கிடைக்கும் என்றும் கணக்கு போட்டு வேலை பார்த்தார். அதன்படியே முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகள் ஏசிஎஸ்-க்கு கிடைத்துள்ளன. அதேபோல, தலித் வாக்குகளையும் இவர் ஓரளவு பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
வன்னியர்கள்
அது மட்டும் இல்லை, துரைமுருகனுக்கு வன்னியர் வாக்குகள் பெருமளவு போகக்கூடும் என்று கணிக்கப்பட்டாலும், அதில் ஓரளவு ஏசிஎஸ்-க்கும் கிடைத்திருக்கவே செய்கிறது. இதற்கு உதாரணம்தான் அனைக்கட்டு சட்டமன்ற தொகுதி. இங்கு பெருமளவு வன்னியர்கள் இருந்தாலும், ஏசிஎஸ் 20 ஆயிரம் வாக்குகளை பெற்று அனைக்கட்டுவை அள்ளிவிட்டார்.
திமுக கணக்கு
வன்னியர் நிறைந்த அனைக்கட்டு தொகுதியிலேயே இப்படி என்றால், முதலியார் நிறைந்த தனி தொகுதியான குடியாத்தத்தில் சமுதாய வாக்குகள் லட்டு போல வந்து விழுந்தன. இதுவும் திமுகவை விட அதிகம்தான். ஆக மொத்தம், திமுகவின் கணக்கு ஒரு தினுசாக இருந்தால், ஏசிஎஸ்-ன் கணக்கு வேறு தினுசாக இருந்திருக்கிறது.. இதுதான் திமுகவுக்கு ஷாக்கையும் தந்துள்ளதாக கூறப்படுகிறது.