கட்டாய மதமாற்றம்- கர்ப்பிணி மனைவி நடிகை திவ்யா சித்ரவதை-படப்பிடிப்பில் நடிகர் அர்ணவ் அதிரடி கைது!
சென்னை: கர்ப்பிணி மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்த புகாரில் சீரியர் நடிகர் அர்ணவ் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி மகராசி தொடரில் நடித்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார்.
நடிகை திவ்யா, செல்லம்மே சீரியலில் நடித்து வரும் நடிகர் அர்ணவ் என்ற நைனா முகமத்தை திருமனம் செய்து கொண்டார். 2017-ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்த இருவரும் கடந்த ஜூன் மாதம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா கதறல் வீடியோ
இதனிடையே நடிகை திவ்யா திடீரென வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கணவரான நடிகர் அர்ணவ் கர்ப்பிணியாகிய தம்மை துன்புறுத்துகிறார்; கட்டாய மதமாற்றம் செய்தார் என பல்வேறு புகார்களை கண்ணீரும் கம்பலையுமாக தெரிவித்திருந்தார். நடிகர் அர்ணவ் சித்ரவதை செய்து அடித்து உதைத்ததால் தன் வயிற்றில் இருக்கும் கரு கலையும் நிலையில் இருக்கிறது எனவும் கதறி இருந்தார் திவ்யா.

அர்ணவ் மீது வழக்கு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார் திவ்யா. இன்னொரு சீரியல் நடிகையுடன் அர்ணவ்-க்கு தொடர்பிருப்பதாகவும் அவருக்காகவே என் கருவை கலைக்கும் நோக்கத்தில் எட்டி உதைத்தார் அர்ணவ் எனவும் திவ்யா கூறியிருந்தார். இதனடிப்படையில் போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

கரு கலைப்பு நாடகம்
ஆனால் நடிகை திவ்யாவின் இந்த புகார்களை நடிகர் அர்ணவ் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகை திவ்யா மீது அர்ணவ் புகாரும் கொடுத்தார். அந்த புகாரில், மனைவி திவ்யா, ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துகிறார். இதனால் மனைவி திவ்யா, ஈஸ்வர்,மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும் நடிகை திவ்யா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அர்ணவ் குற்றம் சாட்டி இருந்தார்.

படப்பிடிப்பில் அதிரடி கைது
இந்நிலையில் நடிகர் அர்ணவ், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தமக்கு கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என அர்ணவ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அர்ணவ் விசாரணைக்கு வர உத்தரவிட்டனர் போரூர் போலீசார். இன்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பூவிருந்தவல்லி அருகே நேமம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவ்வை நடிகை திவ்யாவை சித்ரவதை செய்ததாக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications