லியோ படப்பிடிப்பின் போது காஷ்மீர் டீக்கடையில் வேகமாக வந்த 20 பேர்.. அஞ்சிய டேனியல் பாலாஜி.. கலகல!
சென்னை: அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து நடிகர் டேனியல் பாலாஜியே ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார். மேலும் காஷ்மீரில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. தனது குரலால் அனைவரையும் நடுங்க வைத்தவர். இவர் மருதநாயகம் படத்தின் புரொடெக்ஷன் மேனேஜராக இருந்து பின்னர் சித்தி சீரியலில் நடித்தார்.

இதன் மூலம் டேனியல் என்ற அடைமொழி அவரது பெயர் பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தனது பாடி லேங்வேஜ், குரல், முக பாவனை என அனைத்தின் மூலமும் வில்லத்தனத்தை ஒரு சேர கொண்டு வருவார். வில்லன் ரோல்கள் டேனியலுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. இவர் நடிப்பு கல்லூரியிலும் படித்துள்ளார். இவர் லியோ படப்பிடிப்பின் போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதை பார்க்கலாம். "நான் குறைவான படங்களில் மட்டுமே நடிப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. எனக்கு பயம் அதிம். நாம எதையாவது செய்ய போய் அது மொக்கையாகிவிட்டால் என்ன செய்வது? என்ற பயம்தான். எனவே முடிந்தவரை வித்தியாசமான கதாபாத்திரமோ அல்லது கதாபாத்திரத்தை வித்தியாசமாக பண்ண முடியும் என தோன்றினாலோ அதை நான் எடுக்கிறேன்.
எல்லாமே பூவாக்காக (சாப்பாடு) சில படங்களை அவ்வப்போது செய்கிறேன் என்பதை மறுக்க முடியாது. எனக்கே தெரியும் அந்த படம் தேறாதுனு. இருந்தாலும் நண்பர்கள்தான் அந்த படத்தை எடுத்திருப்பார்கள். "ரெண்டு சீன்ல நடினு" கேட்பாங்க. வெற்றி மாறனின் ஆடுகளம் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் தூரமாக நின்று வேடிக்கை பார்த்தேன்.
வெற்றி மாறன் படங்களில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறேன். ஆன்மீகம் , பக்தி என இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாத்தீகம் பேசுபவன் கூட ஆத்தீகத்தை விமர்சிப்பதற்காக அதை அதிகம் அறிந்துக் கொள்கிறான். லியோ படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற போது அங்குள்ள செக்யூரிட்டி ஆபிசர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
அவர் பைரவா படத்தின் இந்தி டப்பை பார்த்துவிட்டு என்னிடம் அதிகம் பேசினார். அவர் அந்த படத்தை விரும்பி பார்த்துள்ளார். அது போல் காஷ்மீரில் மலை கிராமத்தில் கடும் குளிரில் டீ சாப்பிட சென்றோம். ஒருவர் என்னை பார்த்துவிட்டு 20 பேரை அழைத்துவிட்டார். எனக்கு பயம் வந்துவிட்டது. உடனே அவர்கள் பாக்கெட்டில் கையை விட்டனர். பயம் மேலும்அதிகரித்தது, செல்போனை கொடுத்து செல்பி எடுக்க வேண்டும் என கேட்டனர். அப்போதுதான் நிம்மதி அடைந்தேன். அடப்பாவிகளா இதுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தீங்கன்னு பயந்துவிட்டோம் என பழைய பேட்டியில் கலகலவென டேனியல் பாலாஜி பேசியுள்ளார்.
இப்படி நடிப்பிலும் தனது குணாதியசத்தாலும் நற்பெயரை பெற்ற டேனியல் பாலாஜியின் இறப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடு விளையாடு அமுதன் கேரக்டரை எண்ணி எண்ணி இனி இந்த அமுதனை எப்போது பார்ப்போம் என கண்ணீர் வடிக்கிறார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications