நடிகர் தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது
சென்னை: டெல்லியில் வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் இன்று கைது செய்தது.
டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடந்தது. அப்போது ஒருபிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடியை இறக்கினர்.

பின்னர் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக விசாரித்து வந்த நிலையில் வன்முறையில் தொடர்புடைய 12 பேரின் புகைப்படங்கள் வெளியானது.
அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வன்முறைக்கும் நடிகர் தீப் சித்துவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீப் சித்துவை தேடி வந்தனர்.
தீப் சித்து பாஜகவை சேர்ந்தவர் என்றும் அவர் பாஜக பிரமுகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. எனினும் தீப் சித்துவிற்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அன்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டதாக ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரையும் தேடி வந்தனர். தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் மற்ற 4 பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 14 நாட்கள் தேடப்பட்டு வந்த தீப் சித்து இன்று காலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications