Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை சூழ்ந்த பெருவெள்ளம்.. செயின் மோதிரத்தை விற்று உதவியவர் மயில்சாமி.. நினைவேந்தலில் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் கடன் வாங்கி தானம் செய்தவர்கள் என நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலர் பாராட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை தொடர்ந்து குஷிப்படுத்தியவர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோர் இந்த ஆண்டு காலமானார்கள்.

Actor Karthi praises Mayilsamy and Manobala memorial function

அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளானது. அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது: இவங்க மூவருமே பேசுவதற்கு முன்னாடி அவர்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு மக்களை மகிழ்வித்தவர்கள். டிபி கஜேந்திரன் எப்பவுமே சந்தோஷமா இருப்பாரு, நடிகர் சங்கத்திற்கும் பக்கபலமாக இருந்தார். எப்போதுமே பாசிட்டிவாக இருக்குறவரு பெரிய ஆளுமை உள்ள மனுஷன் அவர்.

மயில்சாமி சார் எனக்கு சிறுத்தை படத்திலிருந்து பழக்கம், தனக்கு மிஞ்சியது தான் தானம்னு சொல்வாங்க. ஆனால் தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர் அவர். கடன் வாங்கி தானம் பணணினார், சென்னை பெருவெள்ளம் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை விற்று நிறைய பேருக்கு உணவளித்தார்.

யாருக்காகவும் உதவி கேட்க அவர் தயங்கவே மாட்டார். எம்ஜிஆரின் தீவிர தொண்டனாக இருந்து அவரைப் போலவே வாழ்ந்தவர். அவரது இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. மனோபாலா எல்லாரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர். நடிகர் சங்கத்தில் ஏதேனும் பெரிய நடத்தினால் அவர் பொறுப்பாக முன்னெடுத்து நடத்துவார். அதே போல் ஏதாவது பிரச்சினை வந்தாலோ வாக்குவாதம் நடந்தாலோ சமாதானப்படுத்த முதல் ஆளாய் வருவார்.

ஈகோ இல்லாத மனிதன் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாருடனும் ஈஸியாக பழகக் கூடிய மனிதர் அவர். இவர்கள் மூவரையும் இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக உள்ளது என கார்த்தி பாராட்டுகளை தெரிவித்தார். மயில்சாமி கஜா புயலின் போதும் அவர் வண்டி நிறைய பொருட்களுடன் கஜா புயல் பாதித்த இடங்களுக்கு கொண்டு சென்றார்.

அதிலும் தான் கொடுத்தது மட்டுமல்லாமல் மற்ற நடிகர், இயக்குநர்களிடமும் பிறருக்கு உதவி செய்யுமாறு கேட்கும் நபர் மயில்சாமி. ஒரு முறை தனக்கு ஆட்டோ கட்டணம் கூட இல்லாமல் தனக்கு கிடைத்த ஊதியத்தை அப்படியே தனது மேனேஜர்களுக்கு கொடுத்த மயில்சாமி, கடைசியில் ஆட்டோவுக்காக தன்னிடம் கடன் வாங்கியிருந்தார் என நடிகர் விவேக் தெரிவித்திருந்தார். அது போல் மனோபாலாவும் தன்னுடைய உதவி இயக்குநர்களுக்காக அதிக உதவிகளை செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+