பிரதமருக்கு கண்டனம்.. முதல்வருக்கு வரவேற்பு.. திருமணத்தில் மயில்சாமி கொடுத்த வித்தியாசமான பரிசு
புதுமண தம்பதிக்கு வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கிய மயில்சாமி
சென்னை: நடிகர் மயில்சாமி ஒரு திருமணத்தில் வித்தியாசமான திருமண பரிசை கொடுத்ததால் அந்த அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
நடிகர் மயில்சாமி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காமெடிகளில் கலக்கியவர். அவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடியன்களுடன் நடித்திருந்தார். மிமிக்ரி கலையிலும் வல்லவர். விவாதங்களிலும் பங்கேற்பது வழக்கம்.
இவருக்கு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. அது குறித்து நிறைய இடங்களில் குரல் கொடுத்துள்ளார். இவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பேசி வந்தார். தனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய அவர் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

எத்தனை வாக்குகள்
அந்த தேர்தலில் 1440 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சினேகனும் போட்டியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருந்தது. அப்போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மயில்சாமி சென்றிருந்தார்.

பெட்ரோல் கேனுடன்
அங்கு மணமக்களுக்கு பெட்ரோலுடன் கூடிய கேனை பரிசளித்தார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் குபீரென சிரித்து விட்டனர். பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பதை அனைவருமே புரிந்து கொண்டனர். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை.

சிரமங்கள்
மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் விலை உயர்வு குறித்தும் யாரும் நினைத்து பார்ப்பதே இல்லை. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகதான் இப்படி செய்தேன். அதே நேரம் தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ 3 குறைத்ததை வரவேற்கிறேன் என மயில்சாமி தெரிவித்திருந்தார். மயில்சாமியின் இந்த வித்தியாசமான பரிசளிப்பு இணையங்களை கலக்கியது. இவரை பார்த்து நிறைய பொதுமக்கள் புதுமணத் தம்பதிகளுக்கு பெட்ரோல் கேனை வழங்கியிருந்தனர்.

எத்தனை மணிக்கு போன் செய்தாலும்
அது போல் ஒரு சினிமா விழாவில் பேசியிருந்த அவர் சிலர் எவ்வளவு விலை உயர்ந்த போனை வைத்திருந்தாலும் போன் செய்தால் எடுப்பதே இல்லை. ஆனால் என்னை யார் எத்தனை மணிக்கு அழைத்தாலும் அவர்களுக்கு நான் பதில் அளிப்பேன். ஆனால் ஒரு நாள் நைட் 2 மணிக்கு ஒருவர் எனக்கு போன் செய்து எந்த நடிகையை.. எந்த நடிகர் வெச்சி இருக்கானு கேட்டார்... யார் யாரை வெச்சி இருந்த எனக்கு என்ன.. நைட் 2 மணிக்கு கேட்கும் கேள்வியா இது, என்ன பார்த்து ஏன் கேட்டானு யோசித்து என் தூக்கமே போச்சு இதனால், நைட் நான் போனை ஆன் செய்து வைப்பதே இல்லை என்று கலகலப்பாக பேசினார் மயில்சாமி.












Click it and Unblock the Notifications