நிபந்தனை ஜாமீனில் மீரா மிதுன் ரிலீஸ்- எந்த சவுண்டும் இல்லை- விருட்டென காரில் ஏறி பறந்தார்!
சென்னை: பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Recommended Video
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தார்.
இது தொடர்பாக மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

கேரளாவில் தலைமறைவு- கைது
ஆனால் மீரா மிதுன் போலீசார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓடி தலைமறைவானார். கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை போலீசார் பெரும் போராட்டத்துக்கு இடையே கைது செய்தனர். அப்போது கூச்சலிட்டபடியே வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜாமீன் மனு
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் ஜாமீன் வழங்க கோரியது.

கிடைத்தது நிபந்தனை ஜாமீன்
இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தினமும் இருவரும் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மீரா மிதுன், சாம் அபிஷேக் இருவரும் நிபந்தனை ஜாமீனில் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

அமளியே இல்லை
பொதுவாக ஊடகங்கள் முன்பாக வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி கொட்டுவார் மீரா மிதுன். ஆனால் புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் நுழைவு வாயில் இருந்த போலீசாரிடம் அனுமதி சீட்டை காண்பித்தார். அங்கு பத்திரிகையாளர்கள் கூடி இருந்த போதும் எந்த அமளியும் செய்யாமல் காரில் ஏறி அமர்ந்து விருட்டென வீட்டுக்கு சென்றார் மீரா மிதுன்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications