சார்பட்டா பரம்பரை பர்வதம்மாவுக்கும் இடியாப்ப பரம்பரை தனலட்சுமிக்கு சண்டை.. அன்றே சொன்ன நாகேஷ்!
சென்னை: சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை குறித்து நடிகர் நாகேஷ் தனது திரைப்படத்தில் பேசிய வசனங்களும் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த படம்தான் சார்பட்டா பரம்பரை. இந்த படம் ஓடிடியில் ரிலீஸானது. இது 1970களில் நடந்த குத்துச் சண்டை போட்டிகளை பற்றிய கதை.
ஆங்கிலேயர் அதிகம் மிகுந்த வடசென்னையில் இ்நத போட்டிகள் நடந்தன. இதில் சார்பட்டா-இடியாப்ப பரம்பரையினர் இடையே சண்டை நிகழ்கிறது.

ஏக் தோ தீன்
"ச்சார்" என்றால் 4 என இந்தியில் அர்த்தமாகிறது. இந்த சார்பட்டா பரம்பரையினர் 4 அடி கொடுத்தாலே ஜெயித்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த இரு பரம்பரையினர் குறித்து அப்போதே நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது திரைப்படத்தில் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார்.

காட்சி
இதுகுறித்து நடிகர் நாகேஷ் நடித்த படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இரு பெண்களுக்கு கரண்டியால் சண்டை நடக்கிறது. அப்போது நாகேஷ் மேட்ச் ரெஃபரி போல் வர்ணனை செய்திருப்பார். அதில் அவர் " இது ஒரு ஜதை ரோஷமான கரண்டி சண்டை.

இடியாப்ப பரம்பரை
சார்பட்டா பரம்பரை எங்கம்மா பர்வதம்மாவுக்கும் இடியாப்ப நாயக்கன் பரம்பரை எதிர் வீட்டு தனலட்சுமிக்கும் ரோஷமான சண்டை. சோடா குடுப்பா... உட்கார்ந்து பார்த்தால் 10 காசு, நின்னுகின்னு பார்த்தா 5 காசு. சோடா கடை நீ சும்மாவே பாத்துகலாம்ப்பா என கூறுகிறார்.
Recommended Video

சோடா
இதையடுத்து சண்டையிட்ட இரு பெண்களுக்கும் சோடாவை உடைத்து கொடுக்கிறார் நாகேஷ். இது போல் இரு பிரிவை சேர்ந்த பாக்ஸிங் பரம்பரைகள் குறித்து அந்த காலத்திலேயே சொல்லப்பட்டதால் அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications