பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குலைக்கப்படலாம்..காரி துப்பிய இந்தியா? நடிகர் பார்த்திபன் போட்ட பதிவு
சென்னை: இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குழைக்கப்படலாம் எனவும், உலக நாடுகள் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் அராஜகத்திற்கு தீர்வு காண வேண்டுமென நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் மோதல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப்படை அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் ராவல்பிண்டி வரை இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது என விவரங்கள் பரவி வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தங்கை ஆலிமா கான் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், அதற்கான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய கூற்றுப்படி, இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் வரை எளிதாக தாக்குதல் நடத்தியுள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் விமானி இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குழைக்கப்படலாம் எனவும், உலக நாடுகள் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் அராஜகத்திற்கு தீர்வு காண வேண்டுமென நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"பாக்கி இல்லாமல்
பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில் பதுங்குக் குழியில் பாக். பிரதமர் ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல்.

போர் முறையுடன் அணுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி yes! S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காரி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது. ஆயினும் ஆயினும் உலக நாடுகள் ஒன்றினைந்நு பாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்!" என பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு தொடர்ந்து ஆதரவு குவிந்து வருகிறது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம்












Click it and Unblock the Notifications