Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜி கணேசன் வீடு விவகாரம்: “அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது”.. கோர்ட்டில் சொன்ன நடிகர் பிரபு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது சகோதரர் ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார் என்றும், அவருக்கு நான் உதவ முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் தொடர்பான வழக்கில் பிரபு தரப்பில் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தனர். இந்தப் படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

Actor Prabhu Declines Responsibility for Brother Ramkumar s Loans in Madras High Court

இந்த கடன் ஒப்பந்தத்தின்போது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராத நிலையில், இந்த விவகாரத்தை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, அவரது மகனான நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனது சகோதரர் ராம்குமார் மகன் துஷ்யந்த் தொடர்புடைய நிதி சிக்கலில் தனக்கு உரிமையுள்ள வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகர் பிரபு தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமெனவும் வாதிட்டார்.

தனது சகோதரர் ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக மூன்றாம் நபரான தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்த செய்ய வேண்டும் என நடிகர் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே?" என யோசனை தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், "இது போன்று அவருக்கு உதவ முடியாது. நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+