நடிகைகள் பற்றி சர்ச்சை பேச்சு.. திமுகவிலிருந்து ராதாரவி அதிரடி சஸ்பெண்ட்
Recommended Video

சென்னை: திமுகவிலிருந்து நடிகர் ராதாரவி தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
நயன்தாரா நடப்பில் வெளியாகும், 'கொலையுதிர்' காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து காரணமாகத்தான் இந்த நீக்கம் நடந்துள்ளது.

ராதாரவி பேசும்போது, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கே.ஆர்.விஜயவாவை மட்டும் அம்மன் வேடங்களுக்கு நடிக்க வைப்பார்கள். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம், என்றார்.
மேலும் 'மீடு' விவகாரம் குறித்தும் பேசிய அவர், நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பிறகு பிரச்னைகள் வராது என்றார்.
நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகைகள் குறித்து தொடர்ந்து இப்படித்தான், ராதாரவி பொது மேடைகளில் தரக்குறைவாக பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ட்வீட்டில், ராதாரவி மீது நடவடிக்கை எடுக்ககோரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பிய நீங்கள் ராதாரவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
@mkstalin sir & @KanimozhiDMK Madame, both respected leaders have voiced vociferously against Pollachi Sexual Harassment case. Please , Why don’t you take stringent action against male chauvinist, crass sexist & bully Mr.Radha Ravi?
— Vignesh Shivan (@VigneshShivN) March 24, 2019
Kindly acknowledge and take action 🙏🏻
இந்த நிலையில், ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராதாரவி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications