வாக்களித்தார் ரஜினிகாந்த்.. எப்போதும் போல் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டு போட்ட ரஜினி!
சென்னை: சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 6 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் மிகவும் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பிறகு அங்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், விரைவாக வாக்களித்துவிட்டு, அடையாள மை தடவிய விரலை காட்டிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பினார். அப்போது ரசிகர்கள் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். சென்னை விருகம்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications