கட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்!
இந்தி திணிப்பு விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி காத்து வருகிறார்
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் வழக்கம் போல கப்சிப். எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருக்கிறார்.. வேறு எதில், கட்டாய இந்தித் திணிப்பு விவகாரத்தில்தான்.
இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கூட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏன் அதிமுக கூட கோபம் காட்டியிருந்தது. ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேன் என்று காத்திருக்கும் ரஜினி மட்டும் வழக்கம் போல இதில் எதுவும் சொல்லவில்லை.

நிலைப்பாடுகள்
ரஜினி ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார். மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ரொம்ப அந்நியமாக நிற்கிறார். இது தெரிந்து நடக்கிறதா அல்லது எதேச்சையாக நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள், நிலைப்பாடுகள் உடனடியாக வருவதில்லை.

அரசியல்
ரஜினி ஒரு சாதாரண நடிகராக இருந்திருந்தால் அவரை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அரசியலுக்கு வரப் போவதாக ஒரு வருடத்திற்கு முன்பு சொன்னவர் அவர். அவரை வைத்து கடந்த 25 வருடமாக அரசியலும் செய்து கொண்டுள்ளனர் பலர். இதனால்தான் மக்கள் பிரச்சினைகளில் அவரது கருத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தி திணிப்பு
ஆனால் ரஜினியோ மக்கள் பிரச்சினைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதில்லை அல்லது அதில் கருத்து சொல்வதில்லை அல்லது குழப்பமாக சொல்லி விட்டுப் போய் விடுகிறார். இப்போது கூடஇந்தித் திணிப்பு விவகாரம் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த நிலையில் அதுகுறித்து ரஜினி தரப்பு பேசவே இல்லை. அமைதியோ அமைதி காத்து வருகிறது.

என்ன அர்த்தம்?
இந்தியைத் திணிக்காதீங்கன்னு சொல்லக் கூட ரஜினிக்கு தோணவில்லையா அல்லது அதை எப்படி என் வாயாலே சொல்வேன் என்று தயங்குகிறாரா என்று தெரியவில்லை. இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்? இந்தி வேணும்னு கேட்கிறாரா? அல்லது மத்திய அரசு ஏன் கட்டாய திணிப்பில் இருந்து பின் வாங்கிவிட்டது என்ற கோபத்தில் இருக்கிறாரா தெரியவில்லை.

அரசியல்
இது நாடு தழுவிய மொழி சமாச்சாரம். இதில கூட வாய் திறக்கவில்லைன்னா எப்படி? முதல் நபரா கருத்து சொல்லவில்லை என்றாலும், மற்றவர்களை பார்த்தாவது கருத்தை உதிர்த்திருக்கலாமே.. குறைந்தபட்சம் ஒரு ட்வீட் போட்டிருந்தால்கூட போதுமே! இதுக்கு கருத்து சொல்லகூட அரசியலுக்கு வந்துதான் சொல்லணுமா? முக்கியமான நேரத்தில், இப்படி பேசாமல் இருப்பதுகூட ஒருவகையில் அதிகார வர்க்கத்துக்கு துணை போவது போலதான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications