Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vijay Sanjeev: விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற நண்பர் சஞ்சீவ்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு நடிகர் சஞ்சீவ் ஆட்டோவில் வந்திருந்துவிட்டு சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர் ஏன் ஆட்டோவில் வந்தார் என தெரியவில்லை.

நடிகர் சஞ்சீவ், விஜய்யின் நண்பர், இருவரது வீடுகளும் அருகருகே உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்கு நடிகர் சஞ்சீவ் ஆட்டோவில் வந்துவிட்டு சென்றுள்ளார்.

vijay sanjeev neelankarai

விஜய்யின் பெரும்பாலான படங்களில் நண்பராக நடித்தவர் சஞ்சீவ். இவர் உண்மையிலேயே நண்பரும் கூட! இவரது அத்தை மஞ்சுளா விஜயகுமார், அது போல் இவரது சகோதரி மறைந்த நடிகை சிந்து. சஞ்சீவ், மெட்டி ஒலி சீரியலில் நடித்திருந்தார். பின்னர் திருமதி செல்வம் சீரியலில் லீடு ரோல் செய்திருந்தார்.

இதையடுத்து சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி உள்ளிட்ட படங்களில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார். அது போல் சாமி 2, யானை, ட்ராமா ஆகிய படங்களிலும் சஞ்சீவ் வெங்கட் நடித்திருந்தார். இவர் நடிகை ப்ரீத்தியை மணந்தார்.

தற்போது இவர் நீலாங்கரையில் இருந்து வருகிறார். கொரோனா காலத்தில் சஞ்சீவ் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்காக விஜய் உணவு சமைத்து கொண்டு வந்து செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு சென்றாராம்.

அது போல் சஞ்சீவ், குழந்தைகளுக்கு அசைவம் சமைத்து தரும் விஜய், ப்ரீத்தி சைவம் என்பதால் அவருக்கு தனியாக சைவ சாப்பாட்டையும் தந்ததாக ப்ரீத்தியே ஒருமுறை தெரிவித்திருந்தார். அண்மையில் கரூரில் தவெக பொதுக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான போது விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அவர் வெளியே வரவில்லை. கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அவர் வந்த போது கூட செய்தியாளர்களை சந்திக்க விஜய் மறுத்துவிட்டார். இதுகுறித்து சஞ்சீவிடம் கேட்ட போது, விஜய் எப்போதும் எதற்காகவும் பயப்படமாட்டார்.

விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார். யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலையில் என்னதான் ஆறுதல் சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்துவிடும். ஆகவே நான் எந்த ஆறுதலையும் சொல்லாமல் உடம்பை பார்த்துக் கொள், கடவுளை நம்பு என்று மட்டும் சொல்லிவிட்டேன்" என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் ஆட்டோவில் வந்துவிட்டு சென்றுள்ளார். அவர் ஏன் ஆட்டோவில் வந்தார் என தெரியவில்லை. மேலும் அவரது வீடு பக்கத்து தெருவில் இருக்கும்போது அவர் ஆட்டோவில் ஏன் வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+