புத்தாண்டு நாளில் நடிகர் சந்தானம் செய்த செயல்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்! அப்படி என்ன செய்தார்
சென்னை: புத்தாண்டு தினத்தில் நடிகர் சந்தானம் செய்த ஒரு செயல் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழில் டிவியில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை அடுத்தகட்ட இலக்காக இருக்கும். ஆனால், அனைவருக்கும் இது ஈஸியாக அமைவதில்லை.

முதலில் டிவியில் இருந்து செல்பவர்களால் சினிமாவில் சாதிக்கவே முடியாது என்ற நிலையை மாற்றியவர் சந்தானம்.. சின்னதிரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உயர்ந்தவர் சந்தானம்,
சந்தானம்: கடந்த 2016இல் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் தவிர்த்து, ஹீரோவாக மட்டுமே நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதன் மூலம் அவர் முன்னணி நாயகனாக உயர்ந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் '80ஸ் பில்டப்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 2024ஆம் ஆண்டிலும் அவரது நடிப்பில் படங்கள் வெளியாக ரெடியாக உள்ளது.
செம செயல்: புத்தாண்டை பொதுவாக பார்ட்டி, சுற்றுலா என்று தான் பலரும் கொண்டாடுவார்கள். ஆனால், புத்தாண்டில் நடிகர் சந்தானம் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். விவசாயம் மீது அதீத ஆர்வம் கொண்ட சந்தானம், புத்தாண்டு தினத்தில் மரம் நடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் "இனிய புத்தாண்டு வாழ்த்துகள், தொடர்ந்து மரம் நடுங்கள், ஒன்றாக உலகைக் குணப்படுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
மரங்களை அதிகளவில் நடுவது சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே முக்கியமானது. அது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை காற்றைச் சுத்தப்படுத்தி, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாகவும், மனிதர்களுக்கு மன அமைதியையும் தருகின்றன.












Click it and Unblock the Notifications