பொய் சொன்னால் அறை விழும்.. பரபரப்பாக ட்வீட் செய்த சித்தார்த்
சென்னை: பொய் சொன்னால் அறை விழும் என நடிகர் சித்தார்த் பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
Recommended Video
பெரும்பாலான நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் போன்றோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தும் தற்போது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழும் என ட்விட் போட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லி இருந்தார்.
அவர் சொன்னதை ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டர் பகிர்ந்து நடிகர் சித்தார்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.