டி ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு.. சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை
சென்னை: நடிகர் டி ராஜேந்தருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

1980 களில் நிறைய படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் டி ராஜேந்தர். இவர் பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றவர்.
இவர் முன்னாள் எம்எல்ஏவும் கூட!. மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது லட்சிய திமுக சார்பில் வேட்பாளர்களை களமிறக்கவும் முடிவு செய்திருந்தார்.

4 நாட்கள்
இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு கடந்த 4 நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வயிற்று வலி என்று தகவலறிந்த சிலர் கூறுகிறார்கள்.

ரத்தக் குழாய்
மேலும் அவருக்கு இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் நல்ல முறையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அடுக்கு மொழி பேச்சு
மேலும் அவரை சிம்பு விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்து செல்லவும் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் வெளிநாட்டு சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. தனது அடுக்குமொழி பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்த டி ராஜேந்தருக்கு என்னாச்சு என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சிம்பு அறிக்கை
அது போல் சிம்புவின் ரசிகர்களும் அவரது அப்பாவுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என பதறி வருகிறார்கள். எனவே இது போன்ற பதற்றங்களை போக்க நடிகர் சிம்பு இன்றைய தினம் மருத்துவ அறிக்கையை வெளியிடுவார் என காலையிலேயே ஒரு தகவல் பரவியது. அதன்படி சிம்பு தனது ட்விட்டரில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது ஆரூயிர் ரசிகர்களுக்கும் அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்,
எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன், நலமாக இருக்கிறார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி என சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications