1 கிராம் ரூ.12,000.. Gpay மூலம் சிக்கிய ஸ்ரீகாந்த்! 4.72 லட்சத்துக்கு போதைப்பொருள் வாங்கியது அம்பலம்
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை 1 கிராம் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், GPay மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப் பொருளை வாங்கி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீகாந்த்திடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் 4.72 லட்சம் ரூபாய்க்கு Gpay மூலம் கொக்கைன் வாங்கியதையும் போலீசார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள்
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாத் மீது பண மோசடி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவலின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரிகள் பெறப்பட்டது. ஸ்ரீகாந்த்திடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ஸ்ரீகாந்த்திடம் டெஸ்ட்
கொக்கைன், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியவர்களிடம் 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனை செய்யலாம். அதன்படி, ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த்தை வைத்து தீக்கிரை என்ற திரைப்படத்தை எடுத்து வந்ததாகவும் அப்போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் தேவைப்படுவதாக பிரசாத் தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாக, போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைதான பிரதீப் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
ஜி-பே மூலம் பணப் பரிவர்த்தனை
சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் இந்த கொக்கைன் போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை தானே பார்த்து உள்ளதாகவும் ஒரு கிராம் கோக்கைன் 12 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு விற்பனை செய்ததாகவும் பிரதீப் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரதீப் தந்த வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப்பிடம் 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GPay மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப்பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஸ்ரீகாந்த்தின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவர் பிரதீப்புக்கு பணம் அனுப்பியதையும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த் கைது
மேலும், ரத்த மாதிரி பரிசோதனையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் வழக்கில் அவரை 3வது குற்றவாளியாக போலீசார் தற்போது கைது செய்துள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பிரதீப் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications