ரூ.3 லட்சம் துணை நடிகையிடம் வாங்கிய நடிகர்? ஒரே வீட்டில் 3 வருடம் தனிக்குடித்தனம் வேற? பிரபலம் நறுக்
சென்னை: விவாகரத்து பெற்ற பெண்ணாகவே இருந்தாலும்சரி, யாராக இருந்தாலும், இன்னொரு நபரை திருமணம் செய்யும் முன்பு, அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். எனவே பெண்கள்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "காதல் படத்தில் நடித்தவர் சுகுமார்.. இவர் ஏற்கனவே திருமணமானவர்.. தன்னுடைய மாமனார், மாமியார் உட்பட அனைவருடனும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் ஒன்றினை வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் தந்துள்ளார்..

செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், "கடந்த 4 ஆண்டுகளாக தனக்கு திருமணமாகவில்லை என்று சொல்லி, காதல் சுகுமார் என்னுடன் வாழ்க்கை நடந்தி வந்தார்.. எனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார்.. ஆனால், சான்ஸ் வாங்கி தராமல், என்னிடம் உல்லாசம் மட்டுமே தினமும் அனுபவித்து வந்தார். என்னை போல அன்பும், பாசமும் அவர்மீது யாருமே காட்டவில்லை என்று கூறினார்.
நகைகள்: 4 வருடங்களாகவே, என்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு, என்னுடைய நகைகளை வாங்கி கொண்டு வந்துள்ளார்.. 3 வருடம் முன்பு, 3 லட்சம் ரூபாயை மார்வாடியிடம் நான் வாங்கி தந்தேன். இப்போது மார்வாடி என்னை பணம் கேட்டு நெருக்கடி தருகிறார். இதுகுறித்து சுகுமாரிடம் கேட்க முயன்றேன்.
அப்போதுதான், அவருக்கு திருமணமாகிவிட்டது, மாமனார், மாமியாருடன் வாழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதனால், நான் நேரடியாகவே சென்று, மார்வாடியிடம் வாங்கி தந்த பணத்தை தருமாறு கேட்டேன்.. ஆனால், அவர் வீட்டிலிருந்தவர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்துவிட்டார்கள். அதற்குபிறகுதான் போலீசில் புகார் தந்தேன். அப்போது அவரும் விசாரணைக்கு வந்திருந்தார்.
வழக்கறிஞர்கள்: ஆனால் 15 வெள்ளை சர்ட், வெள்ளை பேண்ட் அணிந்த 15 நபர்களுடன் வந்திருந்தார்.. அவர்கள் தங்களை வழக்கறிஞர்கள் என்று சொல்லி கொண்டார்கள். அப்போது போலீசாரிடம் சுகுமார், பணம் வாங்கியது உண்மைதான், ஆனால், இப்போது தன்னிடம் பணம் இல்லை என்றார்..
அதேபோல என்னுடைய வழக்கறிஞர்களும், காதல் சுகுமார் மீது சட்டப்படி நடிவக்கை எதுவுமே எடுக்க முடியாது என்கிறார்கள். இப்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.. என் வாழ்க்கைதான் நாசமாகிவிட்டது. நான் மார்வாடியிடம் வாங்கி தந்த பணத்தையாவது, மீடியாக்காரர்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு வாங்கித்தர வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார் சுகுமாரால் பாதிக்கப்பட்ட பெண்.
சுகுமார் திருமணமானவர்: இப்போது நாம் என்ன கேட்கிறோம் என்றால், சுகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதை தெரிந்து கொண்டா அவரிடம் இந்த பெண் பழகினார்? மீடியாக்காரர்களை கேட்டுக்கொண்டா அவருக்கு கடன் வாங்கி தந்தார்? இந்த பெண்ணே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.. விவாகரத்து பெற்ற பிறகு, இன்னொரு நபரை எதற்காக உல்லாசத்துக்கு அனுபவிக்க வேண்டும்?
விவாகரத்து பெற்ற பெண்ணாகவே இருந்தாலும்சரி, யாராக இருந்தாலும், இன்னொரு நபரை திருமணம் செய்யும் முன்பு, அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். இதையெல்லாம் தெரியாமல் பழகினால், இப்படித்தான் புலம்ப வேண்டியிருக்கும்.. எனவே, எப்போதுமே பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications