100 பேருக்கு 500 போலீஸ்! என் டிராமாவை விட பெரிய காமெடி! பாஜக பொருளாதார பிரிவை கலாய்த்த எஸ்.வி.சேகர்!
சென்னை: தன்னை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா அறிவித்திருப்பது தனது டிராமாவை விட பெரிய காமெடி என கலாய்த்துள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, எஸ்.வி.சேகரை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் தேவையற்ற கருத்துக்களை கூறி வருவதாகவும் இதனை பாஜக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் எம்.எஸ்.ஷா கூறியிருந்தார். அதேபோல் தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்களுக்கு இணையாக பாஜக காலூன்றி இருப்பதற்கு காரணமே அண்ணாமலை தான் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இப்படி பல்வேறு தகுதிகளை கொண்ட அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் முன் வைக்கும் கருத்துக்கள் ஏற்க இயலாத வகையில் இருப்பதாகவும் இதனால் எஸ்.வி.சேகரின் பேச்சை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என பாஜக பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்திருந்தார்.
இவருக்கே தனக்கே உரிய பாணியில் கவுன்டர் கொடுத்து கலாய்த்திருக்கிறார் நடிகர் எஸ்.வி. சேகர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''ஐயையோ 500 போலீஸ் பாதுகாப்புடன் 100 பேர் போராட்டம். எந்த அதிகாரமும் இல்லாத பொருளாதாரம் உயர்த்தும் பிரிவு. அணியிலெயே பிரிவு. விளங்கிடும். என் டிராமாவைவிட அதிக காமெடி ரசியுங்கள்.'' இவ்வாறு எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications