தேர்தல்... எதிர்காலம்... நம்பிக்கைக்கு விதைப்போடும் நாள்.. தனி ஸ்டைலில் கமல் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி தேர்தல் முடிந்து எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் தனது ட்வீட் செய்துள்ளார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ்ப் புத்தாண்டு மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மாநிலத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே பல்வேறு தலைவர்களும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு.

நம் நம்பிக்கைகளுக்கு விதைப் போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமிழ், கேரளா, பெங்காலி உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications