லஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர
சென்னை: நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெனிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23ம் தேதி சென்னை மையிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 1,604 ஓட்டுக்கள் பதிவானது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.

ஓட்டுகள் எப்போது எண்ணப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.அடுத்த வழக்கு விசாரணை வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் ஓட்டு எண்ணும் தேதி மற்றும் ஓட்டுக்களை எண்ணும் இடத்தை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அடுத்த மாதமே நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள்.
இதற்கிடையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி, நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைப்பதாக மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை தடைசெய்யும் படி கோரி, நடிகர் விஷால் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்பில் தலையிட முயன்றதாக, ஐசரி கணேஷ் மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். முன்னதாக, நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஐசரி கணேஷ், அனந்தராமன் என்பவர் மூலம் தம்மை அணுகியதாக நீதிபதி தெரிவித்தார்.
தமது வழக்கில் தலையிட முயன்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து, இருவருக்கு எதிராகவும், தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமனுக்கு, நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications