அரசியலுக்கு வர ஆயத்தமாகும் நடிகர் விஜய் - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை
சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தியுள்ளார்.
சென்னை: நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தகுந்த நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று விஜயின் தந்தை சந்திர சேகர் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் சென்னை அருகே பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திருச்சி வடக்கு,திருச்சி தெற்கு,மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் மகாராஷ்டிரா மாநில மக்கள் மன்ற நிர்வாகிகளுடனும் விஜய் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications