Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளைமேக்ஸ்.. மாணவர்களை குஷிப்படுத்தும் விஜய்! கடைசி கட்ட மாணவர்கள் சந்திப்பு எப்போது? வெளியான தேதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தமிழ்நாடு புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். இதுவரை மூன்று கட்டங்களாக மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் நாளை நான்காவது கட்டமாக நிறைவு விழா நடைபெற இருக்கிறது. இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2023 ஆம் ஆண்டு முதன்முதலாக மாணவர்களை சந்தித்தார். கிட்டத்தட்ட 14 மணி நேரம் நின்று கொண்டே மாணவ மாணவிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதோடு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. கடந்த ஆண்டும் மாணவர்களை சந்தித்தார். பரிசு மட்டும் அல்லாது, அவர்களுக்கு விருந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு பெற்றோர்களையும் சந்தித்து வருகிறார்.

Actor Vijay Plus 2 TVK

இதற்கிடையே கடந்தாண்டு நேரடி அரசியலுக்கு வந்த விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் ரிசல்ட் வெளியான உடனே மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என விஜய் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதை அடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை அடுத்து விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கோலகாலமாக நடத்தி வருகிறார். கடந்த 30ஆம் தேதி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும், 2வது கட்ட விழா 4ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசி, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து விஜய் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கினார். இந்த நிலையில் நான்காவது கட்ட மற்றும் நிறைவு நிகழ்ச்சியாக விஜய் நாளை மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுகிறார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில," தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக்கழக தலைவர் மாணவர்களை நேரில் வரவழைத்து விருது வழங்கி பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக 30-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக நான்காம் தேதியும், மூன்றாம் கட்டமாக 13ஆம் தேதியும் பாராட்டு விழா நடைபெற்றது.

இதை அடுத்து நான்காம் கட்டமாக நிறைவு விழா மாமல்லபுரம் 4.5 ஷெரட்டானில் நாளை (15 ஆம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். எதிர்கால சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள விஜய் இந்த பாராட்டு விழாவில் மாணவர் செல்வங்களுக்கு பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்க தொகையையும் வழங்கி பாராட்ட உள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+