கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் திரண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர்களே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அதில் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், தமிழக அரசின் தலைமை காட்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ
மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார்.
இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசித்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இன்று விஜய் ரமலான் நோன்பு இருந்ததாகவும் 6:15 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராயப்பேட்டை ஒய்எம்சிஏ பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட அளவில் ஐந்து நிர்வாகிகள், அதுமட்டுமல்லாது ஜமாத் நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் வருகிறார் என கேள்விப்பட்டவுடன் அப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
விழாவிற்கு வருபவர்களை கட்டுப்படுத்த காவல்துறை மட்டுமல்லாது விஜய் தரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் விஜய் வந்தவுடன் அவ்வளவு நேரம் அமைதி காத்த கூட்டம் விழா நடக்கும் ஒய்எம்சிஏ அரங்குக்கு தடுப்புகளை தாண்டி எகிரி குதித்து சென்றது. இதை அடுத்து அவர்களை சமாளிக்க முடியாமல் பவுன்சர்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் புகுந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எவ்வளவோ முயன்றும் அவர்களை சமாளிக்க முடியாததால் பவுன்சர்கள் திணறிப் போயினர். ஒரு கட்டத்தில் ஆளை விட்டால் போதும் என அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே விஜயை படம் பிடிக்க வந்த ஒளிப்பதிவாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சி முடிவடைந்த உடன் திறந்த பிரச்சார வேனில் விஜய் கையசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் ராயப்பேட்டை பகுதியில் இருந்து அண்ணா சாலை வரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சாலையிலும், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றில் நின்று கொண்டு விஜயை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கையை அசைத்தனர். இதனாஅல் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதன் முறையாக சென்னையில் மையப்பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சிக்கு விஜய் வந்திருந்த நிலையில் மக்கள் ஆதரவு அதிகம் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் தள்ளுமுள்ளு என ஒரு சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது தவெக.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications