கஜா ஏற்படுத்திய சேதம்.. புதிய மரங்களை நடுங்கள்- அரசுக்கு நடிகர் விவேக்
Recommended Video

சென்னை: கஜா ஏற்படுத்திய சேதத்தால் முறிந்து விழுந்த மரங்களுக்கு பதில் புதிய மரங்களை நடுமாறு திரைப்பட நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறைமாத குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட நடிகர் விவேக் குறைமாதக் குழந்தை பிறப்பு உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் நிகழ்வதாகும்.
அதனை தடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையை அந்தந்த பெற்றோர்கள் சரியாக அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருப்பதாகவும் இந்த மரங்கள் இருந்த இடத்தில் புதிய மரங்களை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த புயல் நேரத்தில் தமிழக அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மனித உயிர் இழப்புகளை குறைத்திருக்கிறது பாராட்டுதலுக்குரியது.
மேலும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு அவ்வாறு செய்பவர்கள் தான் மாற வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியில் மிகப் பெரிய அளவில் மாறி வரும் சூழ்நிலையில் ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது.
பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று விவேக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications