என்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டார் விவேக்.. எத்தனை பேர் இருக்காங்க சாரே உங்களுக்காக!
எனக்கென்று யாரும் இல்லை என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்
சென்னை: விவேக் எதுக்காக இப்படி ஒரு ட்வீட் போட்டார் என்றே தெரியவில்லை. எனக்கென்று யாருமே இல்லை என்று சொல்லிவிட்டார்!
நடிகர் விவேக் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர், செந்தில் கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோதும், சம நிலையில் சக நடிகரான வடிவேலு இருந்தபோதும், போட்டி போட்டு நடித்தவர்.. சிந்தனை, சிரிப்பு என்பதையும்தாண்டி மிகச்சிறந்த மனிதர். நல்ல படிப்பாளி.. அறிவாளி!
ஒரு கோடி மரக்கன்றுகளை நடுமாறு அப்துல் கலாம் கூறியதையடுத்து கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் விவேக். இந்த சமூக சேவைக்கு பல தரப்பில் இருந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைதவிர, சமூக அவலங்கள், பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சோகம்
இவ்வளவு இருந்தும் சொந்த வாழ்க்கையில் பெரும் சோகம் விவேக்கை சூழ்ந்துள்ளது. தந்தையை இழந்த சில நாட்களிலேயே பெற்ற மகனையும் இழந்த துயரில் விழுந்தார். ஆனால் அதிலிருந்து அவரால் இன்னமும் மீள முடியவில்லை. அது இன்று அவர் பதிவிட்ட ட்விட்டரிலும் வெளிப்பட்டுள்ளது.
|
படத்தின் வெற்றி
Happy to know that vellaipookkal is still a grosser at seattle! Still housefull here! ஆனால்.. இந்த மகிழ்ச்சியைப் பகிர என் திரை ஆசான் KB, சமூக ஆசான் Dr.APJ, என் தந்தை, என் மகன் யாருமே இல்லை. (என் நண்பர்கள், ரசிகப் பெருமக்களைத் தவிர!)" என்று கூறப்பட்டுள்ளது.

யாருமே இல்லை
அதாவது, திரை ஆசான் கே.பாலசந்தர், சமூக ஆசான் டாக்டர் அப்துல்கலாம், தன் தந்தை, மகன் என யாருமே இல்லை என்றும், வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நண்பர்களிடமும் ரசிகர்களிடமும் மட்டுமே தன்னால் பகிர்ந்துகொள்ள முடியுமென்றும் பதிவிட்டுள்ளார்.
|
இளைஞர் பட்டாளம்
விவேக்கின் நெகிழ்ச்சியான டிவீட்டுக்கு பாசத்தைக் கொட்டி அவரது கவலையை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மகன் இல்லாட்டி என்ன இளைஞர்கள் எல்லோருக்கும் நீங்க தந்தைதானே என்று பாசத்தை காட்டி விவேக்குக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளைஞர் பட்டாளம்.
ஏலே டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!












Click it and Unblock the Notifications