பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க.. கோர்ட்டுக்கு நடிகை அதுல்யா ரவி வேண்டுகோள்
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக நடிகை அதுல்யா ரவி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: "ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வேண்டுகோள், பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க" என்று நடிகை அதுல்யா ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
"காதல் கண்கட்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. 'ஏமாளி', 'நாகேஷ் திரையரங்கம்' படத்திலும் நடித்திருக்கிறார். இவர் ஒரு தீவிர விஜய் ரசிகை ஆவார்.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதுல்யா ரவி
அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் சார்பாக நீதிமன்றங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அவர் அதில் பேசியிருப்பதாவது:

நல்ல பசங்க
"எல்லாருக்கும் வணக்கம். பொள்ளாச்சி விஷயம் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அவங்கள பத்தி நாம பேசிட்டு இருக்கோம். இந்த மாதிரி தெருபொறுக்கி நாய்ங்க பண்ற விஷயத்துனால எவ்வளவோ நல்ல பசங்களையும் ரொம்ப ஜாக்கிரதையா பார்க்க வேண்டிய நிலைமையில போய்ட்ருக்கோம்.

சைக்கோ
மத்த நாட்டில நடந்தா இவனுக்கு எல்லாம் எவ்ளோ தீவிரமான தண்டனை குடுப்பாங்களோ, அதை இவனுங்களுக்கு குடுத்தாதான், அடுத்து இவங்கள மாதிரி பண்றவங்களும் பயப்படுவாங்க. இல்லே.. அப்படி ஒரு நியூஸே வரலேன்னா இன்னும் இந்த மாதிரி சைக்கோங்க எல்லாம் நிறைய விஷயத்தை பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.

தண்டனை
தயவு செய்து உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. இந்த மாதிரி சென்சிபிள் ஆன விஷயத்தை பாலிட்டிக்ஸ்-ஆ ஆக்கிடாதீங்க. அதேமாதிரி ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வேண்டுகோள், பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications