நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு மிரட்டல்! ‘இசட்’ பாதுகாப்பு வழங்க வேண்டும்! நடிகை கஸ்தூரி கோரிக்கை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியரசர் சுவாமிநாதனுக்கு தொடர்ந்து தேச விரோத சக்திகள் மிரட்டல் விடுத்து வருவதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகை கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை நீதிபதி வழங்கி வருகிறார் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றம்சாட்டி இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி
இந்த நிலையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தொடர் மிரட்டல்கள் வருவதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நடிகை கஸ்தூரி. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆம்பூரில் கூட இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். இந்த இரு சமுதாயத்துக்கு இடையே தேவையில்லாத பிரச்சனையை திமுக தான் ஏற்படுத்துகிறது. திருப்பரங்குன்றத்திலும் இத்தனை ஆண்டுகளாக இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக தான் இருந்தனர். அரசியலுக்காக திமுக அவர்களுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் மட்டுமல்ல, ஏற்கனவே பலமுறை இதே போன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்து பண்டிகைகள் மற்றும் இந்து கோவில்களுக்கு வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்தி எதிர்வினை ஆற்றுகிறது. எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நேர்மையான நீதி அரசரை தனிப்பட்ட முறையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் குறி வைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.
இசட் பிரிவு பாதுகாப்பு
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மதுரையில் இருந்து சில தேச விரோத சக்திகள் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் அவர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே மத்திய அரசு நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தமிழக மக்கள் தமிழ்நாடு அரசு மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications