நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு மிரட்டல்! ‘இசட்’ பாதுகாப்பு வழங்க வேண்டும்! நடிகை கஸ்தூரி கோரிக்கை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதியரசர் சுவாமிநாதனுக்கு தொடர்ந்து தேச விரோத சக்திகள் மிரட்டல் விடுத்து வருவதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகை கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை நீதிபதி வழங்கி வருகிறார் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றம்சாட்டி இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி
இந்த நிலையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தொடர் மிரட்டல்கள் வருவதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நடிகை கஸ்தூரி. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆம்பூரில் கூட இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். இந்த இரு சமுதாயத்துக்கு இடையே தேவையில்லாத பிரச்சனையை திமுக தான் ஏற்படுத்துகிறது. திருப்பரங்குன்றத்திலும் இத்தனை ஆண்டுகளாக இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக தான் இருந்தனர். அரசியலுக்காக திமுக அவர்களுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் மட்டுமல்ல, ஏற்கனவே பலமுறை இதே போன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்து பண்டிகைகள் மற்றும் இந்து கோவில்களுக்கு வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்தி எதிர்வினை ஆற்றுகிறது. எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நேர்மையான நீதி அரசரை தனிப்பட்ட முறையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் குறி வைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.
இசட் பிரிவு பாதுகாப்பு
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மதுரையில் இருந்து சில தேச விரோத சக்திகள் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் அவர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே மத்திய அரசு நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தால் தமிழக மக்கள் தமிழ்நாடு அரசு மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்றார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications