சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுல ஓட்டை போட்டு பார்த்தா அது சரியா? என்று டிக் டாக் ஆப்பிற்கு ஆதரவாக பேசிய நடிகை கஸ்தூரி, டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று நீதிமன்ற தீர்ப்பையே விமர்சித்து, பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டிக்டாக் ஆப்பிற்கு மதுரை ஹைகோர்ட் கிளை தடை விதித்திருந்தது. இந்த நிலையில் நேற்று நிபந்தனையுடன் அனுமதி தடையை நீக்கி உத்தரவிட்டது. முன்னதாக டிக் டாக் தடைக்கு இரு வேறு விதமான கருத்துக்கள் எழுந்தன. நடிகை கஸ்தூரியும் தடையை எதிர்த்துப் பேசியிருந்தார்.
இபிகோ 302 என்ற புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி பேசினார். அப்போது டிக்டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனமான நடவடிக்கை என்று சொல்லி நீதிமன்றத்தையே கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதன் சுருக்கம் இது:

சினிமா
"எதுக்கெடுத்தாலும் டிக்-டாக்கை தடை செய்ய வேணும்னு சொல்றாங்க. கேட்டால் அதுல தப்பு நடக்குதாம். முதல்ல சினிமாவை பத்தி இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. கெட்டு குட்டிச்சுவரா போறாங்க..ன்னு சொன்னாங்க. உங்களை யாரு இப்போ கையை பிடிச்சு இழுத்துட்டு வந்து சினிமாவ பாக்க சொல்றது?

நவீன பட்டினத்தார்
சினிமாவை பார்த்துதான் கெட்டு போயிட போறீங்கன்னு நெனச்சா, உங்களை யாருங்க சினிமாவை பாக்க சொல்றது? இப்படி சொல்லற நவீன பட்டினத்தார்கள் யாராவது அரசே நடத்தும் மதுபானக்கடைகளை மூட சொல்லி இருக்காங்க?

ஆபாச வீடியோ
800 ஆபாச வீடியோக்கள் இணையதளத்தை தடை செய்தபோது கருத்து சுதந்திரம்னு சொல்லிட்டு கோர்ட்டுக்கு போனாங்க.. ஆனால் டிக்-டாக்கை மட்டும் தடை செய்வது ஏன்?

பைத்தியக்காரத்தனம்
சன்னிலியோன், வெளிநாட்டுக்காரங்க இருக்கிற வீடியோவுக்கெல்லாம் தடை எதுவும் இல்லை.. ஏன்னா, பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுல ஓட்டை போட்டு பார்த்தா அது சரி, அதுவே நம்ம பொண்ணு போன்ல டிக்டாக் இருக்க கூடாதுன்னா எப்படி? டிக்-டாக்கினால் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா? அதில திறமை வெளிக்காட்டலாம், ஆசிரியர்கள் பாடம்கூட அதில் நடத்தறாங்க. அதனால டிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம்.

செயலி
800 ஆபாச வீடியோ இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட போது எதிர்த்தவர்கள், தற்போது டிக் டாக் செயலியை தடை செய்ய ஆதரிப்பது ஏன் என்பது தனக்கு தெரியும்

தடை செய்வாங்களா?
இப்படியே ஒவ்வொன்னையும் தடை பண்ணிட்டே இருக்க முடியுமா? ஒரு விஷயத்தை செய்யாதேன்னு சொன்னா, திருட்டுத்தனமாத்தான் அதை செய்வாங்க. அதனால நம் சொந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் எப்படி தலையிட முடியும்? என்று பேசியுள்ளார் கஸ்தூரி. கஸ்தூரி பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications