பெண் போலீசுக்கே கத்தி குத்து! முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு தோல்வி! குஷ்புவுக்கு வந்த கோபம்..என்னாச்சு?
சென்னை : போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி சம்பவத்தை குறிப்பிட்ட பாஜக தலைவரான குஷ்பு இந்த பரபரப்பு புகாரினை முன் வைத்திருக்கிறார்.
கடந்த 23ஆம் தேதி இரவு நேரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.

பெண் காவலர்
அப்போது அந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் ஏறியுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஆசீர்வா குடிபோதையில் இருந்த நபரை ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார்.

கத்திக் குத்து
தலைக்கேறிய போதையில் அரை மயக்கத்தில் இருந்த அந்த ஆசாமி பெண் காவலரின் பேச்சால் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆசீர்வா உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தார்.

குஷ்பு பாஜக
அவர் ஓடிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ரயில் நிலையத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது என நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் முதல்வர் ஸ்டாலின் அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு பெண் போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. போலீசுக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது." என பதிவிட்டுள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications