சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்ராவுக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ்.. சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்.. பகீர் கிளப்பும் தோழி!

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம் கொண்டவள் என அவரது தோழி ரேகா நாயர் பல பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சித்ரா விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புகைந்து கொண்டே இருந்த இந்த பிரச்சினை தற்போது மெல்ல மெல்ல பற்றி எரிய தொடங்கியுள்ளது.

அதுவும் சித்ராவை கொன்றவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என ஹேமந்த் போலீஸில் புகார் சொன்னதிலிருந்தே இந்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

சித்ரா தங்கிய ஹோட்டலுக்கு காரில் வந்த மாஜி அமைச்சர்கள் சித்ரா தங்கிய ஹோட்டலுக்கு காரில் வந்த மாஜி அமைச்சர்கள்

மாஜி அமைச்சர்கள்

மாஜி அமைச்சர்கள்

சித்ராவின் மரணத்தில் மாஜி அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சித்ரா மரணத்தில் ஆண் தொகுப்பாளருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே தோழி ரேகா நாயர் கூறி வருகிறார்.

ரேகா நாயர்

ரேகா நாயர்

இதுகுறித்து ரேகா நாயர் கூறுகையில் சித்ராவின் வாழ்க்கை இத்தனை சீக்கிரம் முடிந்துவிட்டதாலும் இந்த குறுகிய காலத்தில் அவர் பல பேரை கடந்து வந்திருந்தார். இதனால் போலி எது, அசல் எது, ஏமாற்று பேர் வழி எது, என பார்த்தவுடனும் பழகியவுடனும் சொல்லிவிடும் அளவுக்கு திறமை உள்ளது.

சைக்காலஜி

சைக்காலஜி

இதற்கு அவர் சைக்காலஜியில் பிஜி பட்டம் பெற்றதும் ஒரு காரணம் ஆகும். சித்ரா மீடியா துறையில் பலருடன் தொடர்பு கொண்டு பல ஆண் நண்பர்கலுடன் டேட்டிங் சென்றுள்ளார். அது போல் டேட்டிங் சென்ற போது சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பிரபல ஆண் தொகுப்பாளர் ஒருவர் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

4ஆவது காதலன்

4ஆவது காதலன்

அவர் யார் என சொல்ல முடியாது. சித்ராவுக்கு ஹேமந்த் 4ஆவது காதலன் என்பதை அவரது மாமனாரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சித்ராவின் இறப்புக்கு ஹேம்நாத் மட்டும் காரணமாக இருக்க மாட்டார். மேலும் இருவருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பிருக்கிறது. சித்ராவும் ஹேமந்தும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள்.

நெருக்கம் ஜாஸ்தி

நெருக்கம் ஜாஸ்தி

இருவரும் காதலர்கள், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் காண்டம்கள் இருந்தன. இதை நானே பார்த்துள்ளேன். மேலும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வருகிறது. அப்படியிருக்கும் போது சித்ரா குளிக்க போகும் போது எதற்காக ஹேமந்தை வெளியே போக சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்தானே.. எனவே ஹேமந்த் சொல்வதில் நிறைய பொய் இருக்கிறது. மாஜிக்களை விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்றார் ரேகா நாயர்.

English summary
Actress Rekha Nair says Chithra had more boyfriends and she had relationship with hemanth very close.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X